Wednesday, November 12, 2008

மணிக்குட்டி

வந்த கண்ணீரைத்
துடைத்துக் கொண்டிருக்கும் மகள்களையும்,
வராத கண்ணீருக்குப் பதிலாய்
மூக்கைச் சிந்தித்
துடைத்துக் கொண்டிருக்கும் மருமகள்களையும்,
காக்கைக்குச் சோறு வைத்துக்
கா காவென்று,
கரைந்து கொண்டிருக்கும் மகன்களையும்,
தினத்தந்தியில் கற்பழிப்புச் செய்தி
வாசித்துக் கொண்டிருக்கும் மருமகன்களையும் விட,
ஓரமாய்ச் சுருண்டு படுத்திருக்கும்
மணிக்குட்டி என்ற நாய்
நினைக்கிறதோ நாச்சாத்தா பாட்டியை,
அவளின் வருசாந்தரத்தன்று.



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO