Thursday, November 20, 2008

ரத்த ராத்திரிகள்

அடைந்து கிடந்த
வாகனச்சாலை
யாருமின்றி.

உருகியோடும்
மஞ்சள் வெள்ளம்
நியான்களுடையதாய்.

தவழ்ந்து கொண்டிருக்கும்
ராத்திரி வாடையின்
தீண்டல் தேகமெங்கும்.

கவிச்சூழல்
ரத்தத்தில் ரணமாகிறது
சீறும் வேகத்தால்.

என்ஜின் உறுமல்களால் குதறுறுகின்றன
நிசப்தம் சொல்லும்
மௌனக்கதைகள்.

அர்த்த ராத்திரிகளில்,
தொலைகின்றன
வாழ்க்கையின் அர்த்தங்கள்.

குருதிக் குமிழிகள்
கொப்பளிக்கின்றன
அம்மாக்களின், அக்காக்களின் மேல்.

தாரோடு ஒன்றிய,
தலைகீழ்த் தவளைகள்
சொல்லும் நியாயம் விளங்கவில்லை
மனிதனுக்கு இன்னும்.

மித வேகம்;
மிக நன்று.



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO