Tuesday, November 11, 2008

நினைவில்..

உயிர் நண்பனுக்குப்
பிறந்த நாள்.
கண் திறந்து, கம்பளிக்குள்ளேயே இருந்து,
தொலைபேசியில்
வாழ்த்திவிட்டுக் கண்ணயர முயலுகையில்,
நினைவிற்கு வந்தது.
கல்லூரிக் காலத்தில் நான்,
ஐ லவ் யு சொன்ன பெண்ணுக்கும்
இன்றே
பிறந்த நாள் என்று.

உணர்ந்திருந்த உண்மைகள்,
வயதின் முதிர்ச்சிகள்,
எல்லாம் தாண்டி,
உள்ளுக்குள் தைத்திருந்த,
நான் மறந்துபோய் விட்டிருந்த,
முள்ளை யாரோ பிடித்து ஆட்டுவதைப்
போலிருந்தது.

குறுஞ்செய்தி அனுப்பினேன்.
அந்த நாட்களை நான்
பகிர்ந்து கொண்ட தோழிக்கு.
ரிப்ளையித்தாள்.
ஊய் என்ன இது
எப்பவோ முடிஞ்சத இப்போ நெனைக்கற..
மனசு சரியில்லனா ரைட் எ கவிதை
என்று.



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO