Friday, November 14, 2008

ஒருத்தி




ஒருத்தியுடனான
முடிவற்று நீளும்
வார்த்தைப் புணர்ச்சிகள்
என் மஞ்சள் இரவுகளின் மேல்
சந்தனத்தை அப்பிவிட்டன.

ஒருத்தியுடனான
கனவில் நிகழும்
துவம்சத் துளிர்ப்புகள்
பன்னீர் அகழியில்
முழுகச் செய்தன.

ஒருத்தியுடனான
அரை நிமிஷ ஸ்பரிசிப்புகள்
தாழம்பூச் சாற்றை
புனல் வைத்து
மூக்கில் ஊற்றின.

ஒருத்தியுடனாகாத
கலகக் கலவிகளோ
முத்துவெள்ளைத் திரவமான
விஷப்பெருக்கில்
உடல் புரண்டு ஊறச் செய்து
அடி வருடி காயச் செய்தன.

இக்கவிதையை வெளியிட்ட கீற்று குழுமத்திற்கு நன்றி.



2 மறுமொழிகள்:

prado November 14, 2008 at 10:24 AM  

anna... super na,,, vaazhga nin tamizh.. valarga un pugalzh..... - pradeep,chennai

jaykay November 14, 2008 at 12:23 PM  

Dear Mathi,

Fantastic, Keep doing.

Vazhka vazhamudan,

JK, Kalai & Gayathri..
Cbe

  ©Template by Dicas Blogger.

TOPO