Thursday, November 20, 2008

உறங்கி விழித்த வார்த்தைகள்

கண்ணில் தளும்பும்
தூக்கம் கன்னம்
தாண்டி
வழிகிறது.

இருட்டுப் பிரதேசம் ஒன்றில்
தொலைக்கப் பட்டவனாய்
முழிக்கிறேன்.

இமைக்கும் தோல்
பூர்த்திப்பது
அரை செண்டிமீட்டர்தான்
என்றபோதும்
அத்தொலைவு
கடக்கப்படாமலிருப்பதன் வலி,
முழு முகத்தையும்
சுருங்கி விரிந்து
சோம்பல் முறிக்கச் செய்து,
இறுக்கி மூடித்
திறக்கும் விழியை
செங்குளத்துக் கருமீனாய்க்
காட்சிப் படுத்துகிறது.

அறை முழுதும்
வெள்ளை
வெளிச்சப் பிரவாகம்.
கூசும் கண்ணின்
மூடத் துடிக்கும்
கடையடைப்பிற்கு
எதிர்க் கட்சிபோல்
பேராதரவளிக்கிறது.

தேய்த்தெடுத்த கண்ணினின்று
சிந்துகிறது செந்தூரம்
இரு கையிலும்.
உடன் தூக்கமும்.

மடியிருக்கும் சதுரக்
கணிப்பொறி சொல்லுகிறது.
எழுதுகிறேன் பேர்வழியென்று
நான் நள்ளிரவில்
தூங்காது,
தூங்கி வழிந்த
கதைதன்னை.



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO