Thursday, January 22, 2009

கிள்ளிக் கிழிந்த திரை



வழக்கம்போலன்றி
சிடு சிடுப்புகளில்லை
எவரெனத் தெரியாத அந்த
அண்ணன் தங்கையின்
கிள்ளல் விளையாட்டால்
ஆஸ்பத்திரியின்
அமைதித் திரையில்
விழுந்த ஓட்டைகளில்.
மாறாய்
ஆங்காங்கே குறுநகைகள்.
எனக்கு
என் தங்கை தெரிந்தாள்
ஒரு கிழிசலில்.



7 மறுமொழிகள்:

ஜ்யோவ்ராம் சுந்தர் January 27, 2009 at 11:16 AM  

செண்டிமெண்டல் கவிதைதான் என்றாலும் எனக்குப் பிடித்திருக்கிறது :)

அனுஜன்யா January 27, 2009 at 5:04 PM  

நல்லா இருக்கு மதன். வாழ்த்துகள்.

சுந்தர், எப்படித் தேடித் தேடிப் படிக்கிறீர்கள்!

அனுஜன்யா

மதன் January 28, 2009 at 2:51 AM  

சுந்தர்,

செண்டிமெண்ட்டும் கொஞ்சம் வேணும் அப்பப்போ. இல்லையா..!:)
எதை எழுதினாலும், வந்து, படித்து, கருத்து சொல்லும் உங்களுக்கு நன்றிகள். தங்கள் கருத்துக்கள் மிகவும் ஊக்குவிப்பவையாக உள்ளன.

அனுஜன்யா,

வருகைக்கு நன்றி.

அதுதான் அவரே சொல்லிட்டாரே.. ’முதன்மையாய் வாசகன். சில சமயம் தான் எழுதுவேன்’-னு..! இவர் சில சமயம் எழுதுவதே இவ்வளவு.. என்றால், முதன்மையாய் வாசகன் என்று சொல்லிவிட்டு, படிக்காமலா..?

ஆதவா February 4, 2009 at 7:59 AM  

வா,,,,,,,வ்.... கலக்கல்.....

வார்த்தையே இல்லை விபரிக்க...

மதன் February 4, 2009 at 9:04 AM  

@ஆதவா.. உண்மையிலேயேதான் பாராட்டுகிறீர்களா..? எனக்கென்னவோ சந்தேகமாக இருக்கிறது.:)

கே.ரவிஷங்கர் February 4, 2009 at 9:51 AM  

நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

மதன் February 4, 2009 at 10:07 AM  

வாருங்கள் ரவி.. எனக்கு சுந்தர் வலைப்பூவில் தங்கள் அறிமுகம் கிடைத்தது. அடிக்கடி வாசிப்பதுண்டு. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

  ©Template by Dicas Blogger.

TOPO