Wednesday, January 7, 2009

எல்லோரும் மறந்துவிட்டிருப்பது

பார்லரில் இருந்தேன்
புருவம் சிரைக்க.
வந்த வேலை முடிந்ததால்
காசு கொடுத்துக்
கொண்டிருந்தவள் ஒருவள்
சற்றே இடுப்பு சாய்த்து நின்றவாறு
பேச்சினூடே ’அழகு’க் கலைஞி
ப்ரீத்தியின் கன்னத்தில்
தடவல் வாஞ்சையிட்டுக் கொண்டு
இருந்தது பட்டது கண்ணில்.
சட்டென, ஆண்டுகளுக்கு முன்
அரையாண்டு விடுமுறையில்
எல்லோரும் தூங்கிய பின்
காவ்யா அக்கா
என் முலை கிள்ளிய
ஞாபகம் துளிர்த்தடங்கியது
நினைவுக் குதிருக்குள்
ஏனோ.



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO