Sunday, July 5, 2009

சற்றே இருளார்ந்த அறைகள், ஊடே நீட்சியாய் மனிதர்கள்



பரவிக் கிடந்த என் போர்வையில்
சுயபோகத்தில் வீணாய்ப் போன என்
லக்ஷங்கோடி மழலைகள் ஊர்ந்து கொண்டிருந்தார்கள்.

இருளை எழுப்பிவிட்டுப் படுக்கையில் அமர்ந்த பின்
எதேச்சையான பார்வையில் நேற்றைய
கனவில் கண்ட மார்பகம் சப்பிக் கிடந்தது ஒற்றையாய்.

சிலுவைகளை Dildoக்களாக உபயோகிக்கும்
அந்தப் பெண்கள் நம் அனைவரின்
தங்கைள், தமக்கைகள், தாய்கள்.

துணைகளற்ற அறைகளனைத்தும் கற்பனையில்
காசு கேட்கா வேசிகளும், ஆக்கப்படாத கவிதைகளும்
Vaginaவுக்கு மாற்றான உள்ளங்கைகளும் விடுத்து

யாதொன்றும் நிரம்பியில்லை

நம்முடையதும்



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO