Monday, April 26, 2010

தற்கொலைப் பிரியங்கள்


பிரியங்களைப் புதைத்து வைக்கும் பூங்காக்கள்
பிரியங்களைப் பூட்டி வைக்கும் கதவுகள்
பிரியங்களைப் பிரித்து வைக்கும் தீர்ப்புகள்
பிரியங்களை உடைத்து விடும் அனுமானங்கள்
பிரியங்களால் உடைந்து விட்ட தன்மானங்கள்
பிரியங்களை உருக்கி விடும் வார்த்தைகள்
பிரியங்களை எரித்து விடும் சந்திப்புகள்
பிரியங்களைச் சிதைத்து விடும் சந்தேகங்கள்
பிரியங்களைக் கிழித்து விடும் வாக்குவாதங்கள்
பிரியங்களில் விரிசலிடும் கடிதங்கள்
பிரியங்களை அசைத்து விடும் போட்டிகள்
பிரியங்களைக் கசக்கி விடும் பருவங்கள்
பிரியங்களைச் சுருக்கி விடும் போதைகள்
பிரியங்களை இறுக்கி விடும் பயணங்கள்
பிரியங்களைத் தொலைத்து விடும் பரஸ்பரங்கள்
பிரியங்களைக் கலைத்து விடும் முத்தங்கள்
பிரியங்களைப் பிய்த்து விடும் சுயங்கள்
பிரியங்களைத் தவற விடும் இச்சைகள்
பிரியங்களைப் பிளந்து விடும் ஆத்திரங்கள்
பிரியங்களை மூழ்கடிக்கும் புரிதல்கள்
பிரியங்களைச் சாய்த்து விடும் பிடிவாதங்கள்
பிரியங்களை நிறுத்தி விடும் முரண்பாடுகள்
பிரியங்களை இழந்து விடும் தோள்கள்
பிரியங்களைக் கவிழ்த்து விடும் ஆசைகள்
பிரியங்களை நொறுக்கி விடும் இயலாமைகள்
பிரியங்களைப் பிழிந்து விடும் கடமைகள்
பிரியங்களை ஒடித்து விடும் நீகள்
பிரியங்களைத் துரத்தி விடும் நான்கள்
பிரியங்களைக் கொன்று விடும் நாம்கள்
யாவற்றையும் விட

பிரியங்களால்
தற்கொலையுண்ட
பிரியத்தின்
ரணமே கொடிதாகிறது


நன்றி: பனிமுலை



3 மறுமொழிகள்:

Unknown April 27, 2010 at 2:04 PM  

நல்லா இருக்குங்க.

மதன் April 27, 2010 at 4:15 PM  

அன்பின் செல்வராஜ்,

நீண்ட நாட்களாக உங்கள் வரிகளின் மூலம் உங்களைத் தெரியும்.

ஒன்றைப் பற்றி சொல்லும் போது,இன்னொன்றைப் போலவே இருப்பதாகவே சொல்வதைப் பற்றிய உங்கள் கவிதை.. அடிக்கடி நினைவுக்கு வரக்கூடிய ஒன்று.

வந்ததற்கும், பாராட்டியதற்கும் நன்றி.

ponsiva June 18, 2010 at 12:06 PM  

ennaku ungal mel priyathai undakkiyathu ungalin intha kavithai...

  ©Template by Dicas Blogger.

TOPO