Sunday, April 11, 2010

அசைவம் சாப்பிடுபவரே.. ஒரு நிமிடம்..

நேற்று மாலை Forum Mallன் உணவரங்கத்தில் இருக்கையில்தான் அது நடந்தது. அங்கிருந்த ChicKing என்ற அங்காடியிலிருந்து அழகாகப் பேக் செய்யப்பட்ட பெட்டிகளில் பொறித்த கோழி வறுவற் துண்டுகளைப் பெற்று செல்லும் எத்தனையோ தட்டுகளில் ஏதேனும் ஒரு தட்டு எனக்குள் அதை வாங்கியுண்ணும் ஆசையை என் நாவணுக்களுள் மீட்டி விட்டது.

அதற்கென்ன வாங்கிச் சாப்பிட வேண்டியதுதானே? என்கிறீர்களா. பிரச்சினை அதுவல்ல. அடிப்படையில் நான் பிறந்தது ஒரு அசைவம் சாப்பிடும் குடும்பத்தில்தான் என்றாலும், பின்னாளில் என் தனிப்பட்ட கோட்பாடுகளின் மீதான பற்றின் பொருட்டு என்னை சைவியாகத் திரித்துக் கொண்டேன்.

1999ல் நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கையில் அசைவம் சாப்பிட்டது. அதற்குப் பின் நேற்றுவரை தொட்டது கூட கிடையாது. அம்மா சமையலையே வெற்றி கொண்டவன் இந்த பிசாத்து ச்சிக்கிங்-ல் எப்படி மனதைப் பறி கொடுத்தேன் என்று தெரியவில்லை. ஆசை வித்தை ஊன்றி விடும் அந்த ஒரு நொடி.. அந்தப் புள்ளியைக் கடந்து செல்வதுதான் நம்மைக் காத்துக் கொள்ளும் ரகசியம் என்றெல்லாம் தத்துவம் பேசப் போவதில்லை நான். என் நோக்கம் வேறு.

ஆசைப் பட்டாலும் எப்படியோ தப்பித்துக் கொண்டு வந்துவிட்டேன். இன்று காலை எழுந்து இணையத்தை நோண்டிக் கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவரின் ஸ்டேடஸ் மெஸேஜில் பார்த்தேன்.

http://www.meat.org/ - The Website that Meat Industry & Meat'atarians do not want to see.If they had glasswalls, everyone would be vegetarian...

நல்ல வேளையாக கோழியைத் திங்காமல் வந்தேன். இல்லையென்றால் அறைக்குள் கூணிப் படுத்திருப்பேன். குற்றவுணர்ச்சி என்னைக் கொன்றிருக்கும்.

ஏன் என்பதை அந்தத் தளத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளுங்கள்!



1 மறுமொழிகள்:

நிலாமதி April 11, 2010 at 5:32 PM  

உங்கள் பதிவுக்கும் .....விழிபுனர்வுக்கும் நன்றி .....

  ©Template by Dicas Blogger.

TOPO