Wednesday, April 14, 2010

பால்யத்திலிருந்து, பாலியம் வரை.. சில சிரிப்புகள்!

அப்பொழுது 6ஆம் வகுப்பா, 7ஆம் வகுப்பா என்று சரியாக நினைவிலில்லை. பள்ளி இலக்கிய மன்ற விழாவில் தமிழாசிரியை எழுதிக் கொடுத்த 'நாளைய பாரதம், நவமணிப் பூ ரதம்!' என்ற கட்டுரையை உணர்ச்சி பொங்கப் படித்துக் கைதட்டல் வாங்கிய ஆர்வத்தில், தமிழைத் தவிர வேறெதையும் சிந்திக்காமலும் இருந்தேன்.

பல்வலி என்று மருத்துவரிடம் அழைத்து சென்றிருந்தார்கள்.

சிகிச்சை முடிந்த பின் டாக்டரிடம், "டாக்டர்.. நீங்க ஒரு பல்துறை வித்தகர்" என்ற வாசகத்தை, 'பல்'லென்பதை மட்டும் நன்றாக அழுத்திச் சொல்லிவிட்டு அதையே காட்டி சிரித்தேன்.

வாய்விட்டுச் சிரித்த டாக்டர் என் வாழ்வின் முதல் ஃபாரின் சாக்லேட்டைப் பரிசளித்தார்.

-0-

அப்போதெல்லாம் பள்ளிக்கு CEO வருகிறாரென்றால் ஒரே தடபுடல்தான். ஆளாளுக்கு ச்சார்ட்டெழுதுவது, வகுப்பறைகளில் ஒட்டுவது என்றெல்லாம்.

அது போன்றதொரு காலகட்டத்தில், எதையோ பற்றிப் பேச தலைமையாசிரியர் அறைக்குச் சென்ற தமிழாசிரியர், உடன் என்னையும் அழைத்துச் சென்றுவிட்டார்.

பேசிக்கொண்டிருக்கும்போது எதிர்பாரா சமயத்தில் CEO வந்துவிட்டார். அப்படி வந்து சோதிப்பதுதானே அவர் பணி.

கல்வி சம்பந்தமானவை தவிர இதர பணிகளுக்கு மாணவர்களைப் பயன்படுத்துவது குறித்து சர்ச்சைகளிருந்த காலமது.

"இவர் தமிழாசிரியர்.. இவர் யார்..?" என்று என்னைக் கைகாட்டியவாறே குறுகுறு பார்வையுடன் பார்க்கிறார் CEO.

சிறியது என்று குறிப்பிடும் தொனியில் கைகளை வைத்து "இவர் தமிழா-சிறியர். நல்லாப் படிப்பார்" என்று கூறிய தமிழாசிரியரின் அங்கதத்தை CEO ரசித்துச் சிரித்தார். தலைமையாசிரியர் பயந்தெளிந்து சிரித்தார். நான் வெட்கித்து சிரித்தேன்.

-0-

கல்லூரிக் காலங்களில்தான் எத்தனை லூட்டிகள்.

எப்போது பார்த்தாலும் வள் வள்ளென்று விழுந்து கொண்டே இருப்பார் ஒரு சார்.

பார்த்தான் பரத் ஸ்றீனிவாசன்!

எங்கள் கல்லூரி பார்க்கிங் ஏரியாவின் நடைபாதையில் வைத்திருந்த No Parking போர்டில் டைகர் பிஸ்கட் விளம்பரம் செய்யப்பட்டிருக்கும். ஒரு சனிக்கிழமையாகப் பார்த்து அதை லவட்டிக் கொண்டு வந்து, Parking என்ற வார்த்தையில் இருந்த Pஐ Bயாக மாற்றியதோடு, ஸ்டாஃப் ரூமில் குறிப்பிட்ட அந்த சார் அமருமிடத்தில் வைத்துவிட்டான்.

மேசை மேலொரு டைகர் பிஸ்கட் பேக்கட்டும்!

-0-

அலுவலகத்தில் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் பிரேக்.

காஃபியருந்திக் கொண்டிருக்கையில், தொலைவில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை மிகப் பிடித்து விட்டது நண்பன் ஹரிக்கு.

கல்லூரியில் இருந்து கார்ப்பரேட்டுக்குள் நுழைந்திருக்கும் பால் மணம் மாறா பாலகர்கள் ஹரியும், அஷ்வினும்.

ஹரி சொன்னான்.

"மச்சான்.. குத்து வெளக்காட்ட இருக்காடா.. ச்சான்ஸே இல்ல.."

சலனப்படாமல் சொன்னான் அஷ்வின்.

"பாத்த உட்னே முடிவு பண்ணாத மச்சி.. குத்துன வெளக்காக் கூட இருக்கலாம்"

இடி இடியென்று சிரித்தேன். மிக நீஈஈண்ட நாட்களுக்குப் பிறகு!



6 மறுமொழிகள்:

www.bogy.in April 14, 2010 at 9:39 AM  

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

மதன் April 15, 2010 at 12:06 AM  

I am glad that you liked it MSK!

Balakumar Vijayaraman April 15, 2010 at 10:56 AM  

அங்கதங்கள் அருமை :)

Sharadha April 15, 2010 at 7:06 PM  

last one was super..i started laughing loud in my office..cant explain it to the people here in english..can i?

மதன் April 15, 2010 at 7:22 PM  

@Sharadha Ka-

I dont think you can!! :)

  ©Template by Dicas Blogger.

TOPO