Sunday, March 29, 2009

உடைந்த நதிகள்



அமைதியாய்த் தவழும் நதி
அடைகாக்கும் கூழாங்கற்களின்
முதுகு வழமை கூடலாம்
அலைக்கட்டுகள்
வட்டங்களாய் விரிவுறுகையில்.

மணற் புள்ளிகள் குத்துவதால்
நதியின் கண்ணாடி வெளியில்
விழும் கீறல்கள்
வண்டலின் மிருதுவைக்
குறைப்பதில்லை.

தார்ச்சாலைகளில்
தண்ணி வண்டிகளின்
நீர்க்கோடுகள்
நினைவுறுத்துகின்றன
நில்லாத நதியுடனே
எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும்
அதன் பயணத்தை.

இக்கவிதையை வெளியிட்ட கீற்று குழுமத்திற்கு நன்றி.



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO