Tuesday, January 25, 2011

தேகிய விளையாட்டு



சற்று முன்னர் தீர்ந்திருக்கும்
மதுப்புட்டியை மத்தியில் வைத்து
சுழற்றி விடல் வேண்டும்

எந்த இருவரை நோக்கி
அது நிற்கிறதோ
அவர்களிருவரும் கலவ வேண்டும்

காமத்தின் தேவன்
ஆட்சி புரியும் நாட்டின்
தேசிய விளையாட்டு இது
தேகிய விளையாட்டு இது

தேவனுக்கும், தேவிக்கும்
ஒருமுறை நேர்ந்த ஊடலின் பொருட்டு
ஏழுகடல், ஏழுமலை தாண்டித்
தனித்திருந்தாள் தேவி

அதுவரை சுருண்டு கிடந்த 
தன் குறியை உருவியெடுத்துத்
தலைக்கு மேலாகவுயர்த்திச் சுழற்றிப் 
பெருவேகமெடுத்து வீசினான் காமதேவன்

தங்க ஜரிகைகளாலான அக்குறி
தேவியின் குரல்வளையில் சுருண்டு
அவளை, அவள் பதியிடமே
சேர்க்கும் முனைப்பில் 
சென்று கொண்டிருக்கையில் வழியெங்கும்
ஞானத்தங்கம்களும், தாண்டவக்கோன்களும்
ஆடிக் கொண்டிருந்த விளையாட்டு இது

அம்மையும், அப்பனும்,
அக்காளும், தம்பியுமாய்,
விதியை மீறாது விளையாடுவதில்
பெருமையான பெருமை அந்நாட்டின் கோவுக்கு

தானே ஞானத்தங்கமாகி விளையாடி,
ஊனமுற்ற ஒருவனைக் கலந்ததில்
விதியின் விளையாட்டு மீறப்படாததை
நினைத்த நமுட்டுச் சிரிப்பை மறைத்தவளாய்,
இழுத்துச் செல்ல வந்த குறிக்குக் 
கழுத்தைக் காட்டினாள் தேவி.

நன்றி: உயிரோசை 24/01/2011 மின்னிதழ்




2 மறுமொழிகள்:

மதன் February 21, 2011 at 12:26 AM  

அஷோக்கண்ணா.. நன்றி.. :)

  ©Template by Dicas Blogger.

TOPO