Tuesday, February 1, 2011

பலூன்களிடம் உடைபடுதல்



அன்பின் போதையில்
சொருகிக் கிடந்த விழிகள்
திடுமென விழிப்புற்று மிரள்கின்றன
நீ உமிழ்ந்து சென்ற வார்த்தைகளில்

காற்றின் காவலாளியாகத்
தன்னை எண்ணிக் கொண்டிருந்த
பலூனைப் படாரென உடைத்து மகிழ்கிறது
பிறந்தநாள் கொண்டாடி முடித்த குழந்தை

ஊதி உயிர்ப்பித்த உடனேயே
உடைபடப்போகும் உண்மையை
பலூன்களுக்கு சொல்லிவிடும்
என் எண்ணத்தை
மிக மென்மையாய்
அழிக்கத் துவங்கினேன்

நீயும்
என்னிடம்
எதுவும்
சொல்லியிருக்கவில்லை

நன்றி: உயிரோசை 31/01/2011 மின்னிதழ்



3 மறுமொழிகள்:

மதன் February 2, 2011 at 12:26 AM  

Thank you Mohan.

அருணா சகோதரி,

நன்றி. :)

  ©Template by Dicas Blogger.

TOPO