Friday, January 21, 2011

நீரை அறுக்கும் வெயில்



செஞ்சாந்து கவிந்து கிடந்த 
பளிங்கு வீதியில் நடந்து வந்த
ஒளிப்புள்ளி ஒன்று
முகவரியாகித் தொலைந்து போன
தன் கதை சொன்னது
 
அறுபடப் போகும் நீரிற்காய்
சாணை தீட்டிக்  கொண்டிருந்த 
வெயிலைப் பார்த்த அச்சத்தை
மறைத்து மறைத்து..
 
கதை முடிந்தவாக்கில்
வாழ்வின் தாத்பர்ய ரகசியத்தை
ஒழுக்கிக் கொண்டே
தன் பாதையில்
பதங்கமாகத் துவங்கியது 

உடன் சில
சொல்லப்படாத கதைகளும்



2 மறுமொழிகள்:

கவி அழகன் January 21, 2011 at 5:20 AM  

தனித்துவமான படைப்பு

http://kavikilavan.blogspot.com/

மதன் January 21, 2011 at 12:58 PM  

நன்றி யாதவன்!

  ©Template by Dicas Blogger.

TOPO