Monday, January 17, 2011

வெற்றி யாருக்கு?

நான்தான் சிம்மராசியாச்சே..
உன்ன கடிச்சுடுவேனே..
என்றதற்கு உள்ளே ஓடிப்போய்
பாட்டியிடம் ஆலோசித்து வந்தவள்
நான்தான் மீனராசியாச்சே..
தண்ணில இருப்பேனே.. 
கடிக்க முடியாதே.. என்றாள்.

அப்போ யாரு ஜெயிச்சானு 
பாட்டியிடமே கேட்கச் சொன்னதற்கும்
உள்ளே சென்று வந்தவள்
பாட்டி மேஷராசியாம்..
உனக்குக் கடிக்கணும்னா 
அவங்களக் கடிச்சுக்கோ.. என்றாள்.

மகனோ, பேத்தியோ..
தோற்க விடுவதில்லை
பாட்டியான அம்மாக்கள்.



1 மறுமொழிகள்:

புபேஷ் January 25, 2011 at 10:32 PM  

nalla iruckunga unga kavithaigal.
viyakka vaikkinrathu ungal karpanai..vaalthukkal

  ©Template by Dicas Blogger.

TOPO