Sunday, November 14, 2010

ஓவியத்தின் கண்


உள்ளாடைக்குள் உருண்டு கொண்டிருந்த
நிர்வாணம் திசையறு வடிவில் நீண்டிளகி
முகத்தின் பரப்பில்
வெளிறி முடிவுற்றது

பாகங்களைக் குறித்த பிறகு
கண்ணின் படம் வரையத் துவங்கும்
குருடனின் ஓவியத்திலிருந்து
உதிரத் துவங்கின கண்கள்

நேற்று பெய்ததும்,
இன்று பெய்வதும் பொதுவாய்
மழையென்றுணர்ந்தாலும்

அவை வேறென்றறியத்
தேவை

உதிரிக் கண்களில்
நனையாதவொன்றை
மழையென்றழைத்தலில்
இல்லாதவுண்மை



5 மறுமொழிகள்:

'பரிவை' சே.குமார் November 14, 2010 at 12:17 PM  

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

ஜெயந்த் கிருஷ்ணா November 14, 2010 at 12:49 PM  

ரொம்ப நல்லாயிருக்கு.

மதன் November 14, 2010 at 4:45 PM  

சே.குமார் மிக்க நன்றி.

பிரஷா - நன்றி.

வெறும்பய - நன்றி!

அழகி November 15, 2010 at 12:35 AM  

//உள்ளாடைக்குள் உருண்டு கொண்டிருந்த
நிர்வாணம் திசையறு வடிவில் நீண்டிளகி
முகத்தின் பரப்பில்
வெளிறி முடிவுற்றது//
அரு​மை நண்ப​ரே.

  ©Template by Dicas Blogger.

TOPO