Monday, November 15, 2010

முலைக்கடிகை


கைகளாலும்,முலைகளாலுமான
இரு பரிமாணம்
காலத்தோடுமியைந்து
முப்பரிமாணமானது
இப்போதாவெனத் தெரியவில்லை

ஆனாலும்

தீரத் தீரத்
திருப்பி வைக்கும்
பதைப்பில்லாத கைகள்
தளர்தலில் ஆழ்ந்திருந்தன

ஏனென்றால்

மேசையில்
நேர்குத்தாக நிறுவப்பட்டிருக்கும்
உனதிரு முலைகளினிடையே
சன்னமாய்
உதிர்ந்து கொண்டிருக்கும்
நம் பிரியத்தின் பொன் துகள்கள்
நின்றுபோகும் அளவை
காலத்துக்குள்
காலமாகி விட்டதால். 



3 மறுமொழிகள்:

THOPPITHOPPI November 15, 2010 at 10:41 PM  

கவிதை அருமை

மதன் November 16, 2010 at 2:17 AM  

நன்றிங்க THOPPITHOPPI!

அழகி November 17, 2010 at 4:51 PM  

​கொஞ்சம் புரியுது ​கொஞ்சம் புரியல... ஆனாலும் கவி​தை ந​டை அரு​மை..

  ©Template by Dicas Blogger.

TOPO