Wednesday, July 7, 2010

திட்டமிட்டதொரு விபத்து

உறவுக்கும் விலகலுக்குமான
விடையைத் தேடியலைந்த
பாதையின் ஒரு திருப்பத்தில்
குறிக்கப்பட்டிருக்க வேண்டும்
சம்பவம் அரங்கேற வேண்டிய இடம்

உயிர் பிழைப்புகள் 
இல்லா வண்ணம் 
கச்சிதமாக நிகழ்ந்து விடல் நலம்

முடமாகிப் போதலென்பது
பிறிதொரு திட்டத்திற்கான
காத்திருப்பே
சக்கர நாற்காலிகளின்
கருணா சுழற்சிகளால்
பயனில்லை

அடையாளங் காண
முடியாததாகக் கசகசத்துப்போன 
முகத்துக்காரர்கள்
பாக்கியவான்கள்

பொதுக் கழிப்பிட யூரினலில்
ஒட்டியிருக்கும் 
சுருண்ட ஒற்றை மயிராய்
பார்க்கப்படுதலை விட



5 மறுமொழிகள்:

நேசமித்ரன் July 7, 2010 at 4:45 AM  

//பொதுக் கழிப்பிட யூரினலில்
ஒட்டியிருக்கும்
சுருண்ட ஒற்றை மயிராய்
பார்க்கப்படுதலை விட//

நச்!

மதன் July 7, 2010 at 11:56 AM  

நன்றி நேஸ்!

எதார்த்தமான உதாரணங்கள் கூட வலி நிரம்பியவையாகத்தானே உள்ளன!

சு.சிவக்குமார். July 7, 2010 at 2:55 PM  

வரிகளில் வழியும் விரக்தி மனதில் இல்லாதிருக்கட்டும்!

கவிதை எனக்கு நிரம்பப் பிடித்திருக்கிறது!

வாழ்த்துக்கள்.

Ashok D July 10, 2010 at 6:58 PM  

நல்லாயிருக்கு மதன்

மதன் July 10, 2010 at 9:59 PM  

சு.சிவக்குமார் - வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி!

அஷோக்கண்ணா - நன்றி! :)

  ©Template by Dicas Blogger.

TOPO