Monday, May 10, 2010

நானிற்குள் பதுங்கும் விலங்கு


















ஒரே மொடக்கில்
அன்பின் இறுதிச் சொட்டுவரை
உறிஞ்சி விட எத்தனிக்கும்
வாய்களை நிரப்பத்
தினவெடுத்தவிரு முலைகளில்லாதது
என் நான்

மடியில் தலை வைத்த காலத்துக்கு
திதியாகி விட்டது
தலையில் மடி வைத்துப்
பாளம் பாளமாய் வெடித்துக்
கிடந்த வெக்கைப் பரப்பின்
அருகம்புற் பனித்துளியில்
முகம் பார்க்கையில்

தலையில் வைத்திருந்த
மடிக்குள்ளேயே உறிஞ்சப்பட்டது
முழுவுடலும்

முனை மழுங்கிய
கோரைப்பற்களை மறைக்க முற்படுகிறது
நானிற்குள் பதுங்கிய
விலங்கொன்று


நன்றி: கீற்று



7 மறுமொழிகள்:

நேசமித்ரன் May 11, 2010 at 3:51 PM  

நல்லா இருக்கு மதன்

மதன் May 11, 2010 at 4:59 PM  

நன்றிங்க நேஸ்!

Ashok D May 11, 2010 at 9:21 PM  

ரொம்ப நல்லாயிருக்குங்க மதன்... நன்றி யாத்ரா :)

Ashok D May 11, 2010 at 9:23 PM  

போட்டோ பயமுறுத்துது.. சின்ன பையன் நானு, பாத்து போடுங்க

மதன் May 12, 2010 at 1:15 AM  

அஷோக்-

நீங்க நல்லாருக்குனு சொல்லிட்டிங்கனா அதுக்கு மறுபேச்சே இல்ல. :)

ஃபோட்டோ.. நீங்க சின்னப் பையனா..? அப்போ நானு.. பச்சிளங் குழந்தையா..?

மதன் May 12, 2010 at 1:16 AM  

ஆமா.. யாத்ராவுக்கு எதுக்கு நன்றி..? என்னப் பத்தி என்ன சொன்னார்..? :)

Ashok D May 12, 2010 at 11:00 AM  

பின்னூட்டம் போட்ட ஸ்டயிலு.. யாத்ராவினுடையது... அதான் :)

  ©Template by Dicas Blogger.

TOPO