Sunday, March 21, 2010

மல்லாந்து கிடக்கும் வானம்






















மானஸ கங்கையில் கரையொதுங்கிய
பிரேதங்களில்
முன்பு வலது கண்ணிருந்த
துளையினுள் ஊர்ந்து சென்றது
உறுமீனொன்று

தான் பார்த்தவைகள் குறித்தான
பீதியில் விசும்பினார்கள்
பிரேதங்கள்

நதியின் முற்றத்தில்
பௌர்ணமி நாளின் பகற்பொழுதுக்காக
அழுது கொண்டிருந்தவனுக்கு

இந்தக் கவிதையை
எழுதாதவனின் சாயலிருந்தது

மல்லாந்து கிடக்கும்
ஆகாசத்தின் மீது

காறியுமிழ்ந்தது பூமி


நன்றி:  கீற்று



6 மறுமொழிகள்:

கதிரவன் March 21, 2010 at 11:51 PM  

வித்தியாசமான பார்வை மதன்

மதுரை சரவணன் March 22, 2010 at 12:20 AM  

நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் March 22, 2010 at 2:17 AM  

ரொம்ப நல்லாருக்கு மதன்!

நேசமித்ரன் March 22, 2010 at 6:42 AM  

இந்தக் கவிதையில் இருக்கும் திணை மாற்றங்கள் வசீகரம்

மதன் March 23, 2010 at 7:27 AM  

நன்றி கதிரவன்.

நன்றி Madurai Saravanan.

நன்றி பா.ரா! என்னையும் ’மக்கா’னே கூப்பிடுங்களேன். :)

நன்றி நேஸ்!

அஷோக் - ஸ்மைலியப் போட்டாச்சா.. ரைட்டு!

Dr. Srjith. March 29, 2010 at 1:39 PM  

நல்ல முயற்சி நண்பரே

  ©Template by Dicas Blogger.

TOPO