Tuesday, February 23, 2010

வார்த்தை விளையாடாமை - III

கண்ணே கத பேசுதே
என்றேன்.
என் மிகையின் எள்ளலை
அறிந்து கொண்டவள்
நான் கவிஞன் என்பதால்
இல்லாதவற்றையெல்லாம்
இருப்பதாகக் கூறுவதாகக்
குற்றம் சாட்டினாள்.
இல்லாதவற்றையெல்லாம்
இருப்பதாகக் கூறினாலும்,
இருப்பதை இருப்பதாகக்
கூற இயலாத
குற்றத்தை
ஒப்புக் கொண்டு விட்டேன்.



வார்த்தை விளையாடாமை - II



1 மறுமொழிகள்:

vidivelli February 23, 2010 at 7:49 PM  

very nice this poem.
sempakam

  ©Template by Dicas Blogger.

TOPO