Friday, February 26, 2010

அரூபத்தின் சித்திரம்



அரூபத்தை
வரைந்து கொண்டிருந்த
கடவுளின் ஆயிரம் கைகள்
இதற்கு முன் தீட்டியிருந்த
தனிமையின் ஓவியத்தில்
அரூபத்தின் சாயல் படிந்திருக்கிறதா
என்றொரு கணம் சிந்தித்தன

அவ்வோவியத்தினுள்
ஓசைப்படாது எட்டிப் பார்த்திருந்த
அரூபத்தை
சிருஷ்டிகர்த்தாவால்
உணர இயலாத கணத்தில்
மெலிதாய்
புன்னகைத்தது அரூபம்
அதே ஓவியத்தினுள்

தூரிகை தீட்டும் தன் கைகளை
வேடிக்கை பார்க்கத் துவங்கியது
இறை
தான் தொலைந்து போன
அரூப வெளி குறித்து
அறியாது


நன்றி: கீற்று



3 மறுமொழிகள்:

Ashok D February 26, 2010 at 8:47 PM  

வார்றேவாவ்!

மதன் February 27, 2010 at 3:50 AM  

ஹேய்.. தேங்க்ஸ் யா..! :)

  ©Template by Dicas Blogger.

TOPO