Monday, April 27, 2009

ஆனந்த ஞானக்கூத்து

என்னைக் குறியெய்யும்
அழிமானங்கள்
யாதொரு கட்டவிழ்ப்பையும்
என் மேல் ஏவாதோட
ஆனந்தமாயிருக்கச் சித்தமாகிறேன்
உலகம் குழுமியிருக்கையில்
நிர்வாணம் வெட்கமுறாததாகி
என்னுடனே தெறித்தாடும் குறியைக்
கண்ணுறாமல்
கூத்தாடுதலின் ஞானாந்தகாரத்தில்
அவா கூடுகிறேன்
பிரஸ்தாபங்கள் காட்டும் ஒளிக்கூறு
காலப் பெரும்பள்ளத்தினுள்
வெள்ளைப்பூனையையும்
கண்காட்டத் தக்கதாயில்லை
உள்சென்ற துவார வாயில்களின்
வழியாகவே பிதுங்கி வழிவது
வாழ்வின் சங்கீதம்
அதன் லயத்தோடு ஒட்டாமல்
ஆடுகிறேன்
கூத்தாடுகிறேன்
கூத்தாடிக் கூத்தாடிப்
போட்டுடைக்கிறேன்
போட்டுடைத்துப் போட்டுடைத்துக்
கூத்தாடுகிறேன்.



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO