Wednesday, February 2, 2011

அதீதமாய் ஒரு கவிதை


அரந்து, பரந்து ஓடி, நாலு காசு பார்க்க மாட்டோமாவென்று அனைவரும் உழன்று கொண்டிருக்கும் எந்திர கதி வாழ்வுத் தளத்தில் ஒரு சிற்றிலக்கிய (இந்த ‘சிற்றிலக்கியம்’ என்ற சொல்லாடலிலேயே எனக்கு உடன்பாடில்லை) இதழைத் துவங்கும் எண்ணம் வருவதற்குத் தேவைப்படும் மனோ திடத்தைக் கற்பனை செய்து பார்ப்பதில் பெருமூச்சு மிஞ்சுகிறது.

இந்த வகையில் சகோதரி மீரா ப்ரியதர்ஷினியின் மின்னஞ்சலில் தெரிய வரப்பெற்றது அதீதம் என்ற இணைய இலக்கிய இதழ் குறித்து. மீரா மற்றும் அதீதம் ஆசிரியர் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளையும், அனுப்பிய கவிதையைப் பிரசுரித்தமைக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பார்க்க: http://www.atheetham.com

இனி கவிதை.

இசைய அமைத்தல்




வலுக்கட்டாயமாக 
ஏதேனுமொரு பாடலை யோசித்து
அறைத் தோழனுக்குக் 
கேட்கும்படி முணுமுணுப்பேன்.

மிக அணிச்சையாய் காட்டிக்கொள்ளப்பட்ட
அந்தப் பாடலுக்குப் பின்புறம்
மெல்லிழையாய் படிந்திருக்கும்
என் கயமை குறித்து
அவனுக்குத் தெரியாது,
சற்று நேரம் கழித்து
அதே பாடலை அவன்
முணுமுணுக்கையில்.

அப்போது நான் புன்னகைப்பதும்




0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO