Sunday, July 3, 2011

ஒரு முடிவுக்கு வரும் கணம்



நீ இல்லாத நாட்களை
ஒவ்வொன்றாய் கிழித்தெறியத்
துவங்கினேன்

இன்று வந்தது

உடன் புரிய வந்தது
வருங்காலத்திலும் இப்படி
எதையும் கிழித்துக் கொண்டிருப்பதில்
எனக்கு விருப்பமிருக்காது என்பது

அந்த கணத்தில்
எடுக்கப்பட்டிருக்கலாம்
எதிர்காலத்தின் மீதான அஞ்சுதலில்
நிகழ்காலத்தை இறந்த காலமாக்கும்
ஒரு முடிவு



2 மறுமொழிகள்:

ப.மதியழகன் September 1, 2011 at 11:08 AM  

வார்த்தைகளின் கோர்வை அருமையாக இருக்கிறது.இணைய இதழ்களில்(வார்ப்பு,திண்ணை,உயிரோசை,பதிவுகள்,முத்துக்கமலம்,நந்தலாலா,நவீன விருட்சம்) தொடர்ந்து எழுதி வரும் எனது இரண்டாவது கவிதை தொகுப்பான சதுரங்கத்தை வாங்க தொடர்பு கொள்க 9597332952.எனது blog:pamathiyalagan.blogspot.com

  ©Template by Dicas Blogger.

TOPO