Tuesday, December 2, 2008

வறுமையின் வெறுமை

அபார்ட்மென்ட் செக்யூரிட்டியின்
மனைவி அவள்.
மஞ்சளிடும் தெரு விளக்கில்
அமர்ந்து,
பிரக்ஞையற்று எதையோ
வெறித்துக் கொண்டிருந்தவளின்
மார் முட்டிப்
பாலுறிஞ்சிக் கொண்டிருந்தது
குழந்தை.
தாய்மையும் மரத்து விட்டிருந்த
காரணம்
குழந்தைக்கு இல்லாத பல்லா
இல்லை
புருஷனிடம் இல்லாத காசா
தெரியவில்லை.



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO