Wednesday, September 22, 2010
Thursday, July 22, 2010
வார்த்தை விளையாடாமை - 4
தொலைபேசிக் கொண்டிருந்தேன்
அவளுடன்
அவள் பேசுவதையெல்லாம்
அவளின் துடுக்குத் தோழி
அவளைப் போலவே
திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது
எனக்கும் கேட்டது
திரும்பச் சொல்ல முடியாதபடி
'என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ'
என்று சொல்லச் சொன்னேன்
எவளிடமும் அவள்
தோற்கக் கூடாது
என்ற ஆணவத்தில்
தோழி சொல்ல முடியாதபடி
எதுவுமே சொல்லவில்லை அவள்
எவரிடமும் என்னைத்
தோற்கக் கூடாது
என்ற அன்பில்..
தொடர்புடைய படைப்புகள்:
Tuesday, February 23, 2010
வார்த்தை விளையாடாமை - III
கண்ணே கத பேசுதே
என்றேன்.
என் மிகையின் எள்ளலை
அறிந்து கொண்டவள்
நான் கவிஞன் என்பதால்
இல்லாதவற்றையெல்லாம்
இருப்பதாகக் கூறுவதாகக்
குற்றம் சாட்டினாள்.
இல்லாதவற்றையெல்லாம்
இருப்பதாகக் கூறினாலும்,
இருப்பதை இருப்பதாகக்
கூற இயலாத
குற்றத்தை
ஒப்புக் கொண்டு விட்டேன்.
வார்த்தை விளையாடாமை - II
தொடர்புடைய படைப்புகள்:
Thursday, December 3, 2009
வார்த்தை விளையாடாமை - II
மருதாணி போட்டுக் கொண்டால்
ஊட்டி விடுவாயா என்றாள்.
மருதாணி போட்டுக் கொண்டு
ஊட்டி விடு என்றேன்.
அழகாய் சிவந்தது
காதல்.
தொடர்புடைய படைப்புகள்:
Wednesday, June 24, 2009
வார்த்தை விளையாடாமை - I
கண்மூடி
வாங்கிக்கொள்வாயா என்றேன்.
வாங்கிய பின்
கண்மூடிக்கொள்வேன் என்றாள்.
மோக்ஷமடைந்தது
முத்தம்.
தொடர்புடைய படைப்புகள்:
