Thursday, December 25, 2008

ஒற்றைத் துளி

சிவப்பேறிவிட்டிருந்த வார்த்தை ஊசியை
கோபச்சூட்டில் இருந்தெடுத்தவன்
ராத்திரியின் ஊடலில்
அவள் மேல் இழுத்துவிட்டதில்
தடிப்புக் கோடுகளை முந்தானையில் மறைத்தபடி
தூங்கிப் போயிருந்தாள்.

'அழகா..' என்று அழைத்தவளையும்
அடித்துச் சாய்த்திருக்கிறேன்
குரூரனாய்.

காயத்தில் என்னைக் களிம்பிட்டு
மன்னிக்க மனமுவப்பாள்.
உறங்கியபின் நான் துடைத்த
ஒற்றைத் துளியது தெரிந்தால்.



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO