Thursday, December 25, 2008

கையாலாகாதவனின் காலை

இறுகிவிட்டிருந்த தேங்காயெண்ணைக்
குப்பியைப் பிதுக்குகிறேன்
டிசம்பர்க் காலைகளில்.

குளிர்ந்திருந்த முந்தின இரவில்
தீர்க்க முடியாத
மனைவியின் தாபம்
நினைவில் வந்துறுத்துகிறது
வெளிவருதலின் ரூபத்தில்.



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO