Tuesday, December 2, 2008

போய்வா மழையே..

ஓய்ந்துவிட்ட
மழை மாலையால்
ஈரம் சொட்டிக்கொண்டிருக்கும்
பின்மழை நேரங்கள்.

ஜன்னல் கம்பியில்
மழைப் பிள்ளைகளின்
வரிசைத் தற்கொலைகள்.

கழுவப்பட்ட
ஊரின் அமைதி
மிகப் புதியதாய்.

வெள்ளையான வானம்.
வண்ணங்களின் நிலையின்மையைப்
பறையிட்டபடி.
இல்லாத மஞ்சள்
என்னை மட்டும் உறுத்தும்.

மழை உதிர்த்துவிட்ட
இலைகளுக்கு,
செத்துப் போய்விட்ட மழையின்
மிச்சப் பெருந்துளிகளையே
கண்ணீராக்கிப் பழி வாங்கும்
மரங்கள்.

மழையின் மரண அஞ்சலிக்கு
திடீரென முளைக்கும்
குடை மனிதர்கள்.

உடலை உறுத்தா இதக்குளிரில்
சாலைக்குழி
மழை எச்சத்தில்
கால் வைத்து விடாமல்
அவள் கைப்பிடித்து,
நின்றுவிட்ட
மழையில் நனைந்தபடி
நான்.

இக்கவிதையை வெளியிட்ட கீற்று குழுமத்திற்கு நன்றி.



1 மறுமொழிகள்:

Shobana December 8, 2008 at 12:14 AM  

Dae Matha... final touch irukae... anga nikara da nee! kalakitta po..!

  ©Template by Dicas Blogger.

TOPO