Friday, December 12, 2008

குறிப்பிறழ்வும், குப்புறப் படுத்தலும்

அவசரமாய்ப் பகுடர் அப்பி,
உதட்டில் இழுக்கியிருக்கும்
அடர்சிவப்புக் கண்றாவி தொட்டெடுத்து,
நெடுஞ்சாலை முற்சந்தின் மங்கல் இருட்டில்
தொழிலுக்கு முதல் போடுகிறார்கள்
ஒரு ஆறேழு திருநங்கைகள்.

பிறழ்ந்த குறியால்
நிகழ்ந்த குற்றத்தைக்
கழுவ வழியில்லாக்
கேடு அவர்களுக்கு.
சமூகம் செத்தால் சாகட்டும்.
பெற்றவர்களும் புறந்தள்ளிய வலி
குப்புறப்படுத்தெந்திரிப்பதை விட
அதிகமில்லை.



2 மறுமொழிகள்:

Sindhu,  December 12, 2008 at 10:06 AM  

Vaaippe illa!!!!!!!!

Vaarthaigalum illai..........

  ©Template by Dicas Blogger.

TOPO