Thursday, December 25, 2008

நான் ரௌத்திரன்

மூக்க விறுச்சுட்டுப் பேசறாம்பாரு
என்பார் அப்பா பள்ளி நாட்களில்.

கைக்குள் சிக்கிய காற்று பிதுங்கித் தெறிக்கிறது
விரல்கள் ஒவ்வொன்றையும்
முனை முட்டி இறுக்குகையில்.

தனித்த வனத்தின் ஈரமேறித் தொங்கிப்போன
ஒற்றை வாழையின் அடியைக்
கிழித்துக் குலைக்கும் கோடாரிக் கூர்மையாய்
முறைத்து முகிழும் கண்கள்.

பொங்கித் தளும்பும் ரௌத்ரம்
அடங்குதலுக்காய் அலைந்தலைந்து
சுடு சொற்களின் சொர சொரப்பில்
முதுகு சொரிந்துகொள்கிறது.

அண்மையாகத்தான்
விறைப்பின் நீளத்தில் இற்று வரும்
வீரியம் புலனாகிறது.
ஆங்காரத்துக்கும் எனக்கும் நிகழும்
சினந்த புணர்தல்களில்.

உயிரோசை 05/01/2009 மின்னிதழில் பிரசுரமானது.



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO