Tuesday, August 17, 2010

தெரிந்தும் தெரிந்துமே



















அழ வேண்டும் என்று
முடிவு செய்தால்
எத்தனை சத்தமாக அழ முடியுமோ
அத்தனை சத்தமாக அழ வேண்டும்

அழ வைக்க வேண்டும் என்று
முடிவு செய்தாலோ
எந்தளவுக்கு சத்தம் வராமல் அழ முடியுமோ
அப்படி அழ வைக்க வேண்டும்

ஒப்புக் கொள்ள வேண்டுமென்று
தோன்றிவிட்டால்
செய்ததில் பாதியை எல்லோர் முன்பும்
ஒப்புக் கொள்ள வேண்டும்

காட்டிக் கொடுக்க வேண்டுமென்று
தோன்றிவிட்டாலோ
செய்யாததில் பாதியையும்
குறிப்பிட்ட மிகச்சிலரிடம்
காட்டிக் கொடுக்க வேண்டும்

நம்மைப் பெருமைப்படுத்துபவர்கள்
குனிந்து நம் மணிக்கட்டில்
முத்தமிட்டால் போதுமானது

நாம் பெருமைப்படுத்துபவர்களுக்கோ
குனிய வைத்து
பின்புறம் முத்தமிட வேண்டும்

தற்கொலை செய்துகொள்ள
வேண்டுமென்று யோசித்தால்
எவ்வளவு கொடூரமாகச் சாக முடியுமோ
அவ்வளவு கொடூரமாகச் சாக வேண்டும்

கொலை செய்வதைப் பற்றி யோசித்தாலோ
எத்தனை சாந்தமுடன்
ஒரு கொலை சாத்தியப்படுமோ
அவ்வண்ணம் நிகழ்த்த வேண்டும்

சரி.
இவையெலாம் எதற்காக?

தெரிந்தோ தெரியாமலோ
நமக்கென வாய்த்து விட்ட
அனுதாபத்தையோ,
பெருமிதத்தையோ
தக்க வைத்துக் கொள்ளவும்

அதைவிட முக்கியமாய்

தெரிந்தோ தெரியாமலோ
பிறருக்கென வாய்த்து விட்ட
அனுதாபத்தையோ,
பெருமிதத்தையோ
தெரிந்தும் தெரிந்துமே
சிதைத்தொழிக்கவும்


நன்றி: உயிரோசை 16/8/2010

Read more...

Sunday, August 8, 2010

காலத்தின் You டர்ன்

துளிர்த்தலின் மீதான கனவுடன்
கிளையைத் தேடி
மேலெழும்பிய சருகுக்கு
பின்னகரும் காலத்தின்
துவக்கப் புள்ளி
சூட்சுமம்
உறைத்திருக்கவில்லை

விதைக்குள் திணிவதற்காகக்
கீழிறங்கிக் கொண்டிருந்த
மரத்தின் செடியை
நடு வழியில்
காணும் வரை

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO